நொடியில் நிகழ்ந்த விபத்து... முடங்கிய வாழ்க்கை! - முத்தமிழின் கண்ணீர் கதை! #emotional
  • 3 years ago
Reporter - கு.ஆனந்தராஜ். | Camera - உ.பாண்டி
அந்தச் சில நிமிட தூக்கமே, முத்தமிழ்ச்செல்வனின் வாழ்க்கையை முழுவதுமாக முடக்கிப்போட்டிருக்கிறது.
மறக்க முடியாத மகிழ்ச்சியான நினைவுகளைத் தருவதில் ரயில் பயணம் எப்போதுமே தனித்துவமானது. அத்தகைய ரயில் பயணம்தான், முத்தமிழ்ச்செல்வன் என்ற இளைஞருக்கு எஞ்சிய வாழ்நாளுக்கான வலிமிகுந்த சுவடுகளை உண்டாக்கியிருக்கிறது. ஓர் அதிகாலைப் பொழுது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த அந்த விபத்து, இந்த இளைஞனின் கனவுகள் அனைத்தையும் வேருடன் அசைத்துப் பார்க்கும் விடியலாக அமைந்துவிட்டது. #emotional #help #inspiration
Recommended