வீரவர்கோவில் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி விழா- வீடியோ

  • 5 years ago
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு பாஞ்சாலி அம்மன் திருக்கோயிலில் கடந்த 20 நாட்களாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்த நிலையில் அம்மன் திருக்கல்யாணம் அர்ஜுனதபசு,துரியோதனன் படுகளம், உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து இன்று அக்னி வசந்த (அக்னி குண்டத்தில் இறங்கும்) விழா நடைபெற்றது இதில் 250 க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து கொம்மேஷ்வரம் பாலாற்றங்கரையில் இருந்து பூங்கரகத்துடன் ஊர்வலமாக வந்து தீ குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினார்கள் இதில் ஆம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

DES : More than 250 devotees in the fire at the Draupadi temple at Draupadi Amman temple in Ambur next in Ambur.

Recommended