புது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
  • 6 years ago
ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தீயாக வேலை செய்து வருகிறது. சென்னை அணி எந்த வீரர்களை எடுக்க வேண்டும் ஏற்கனவே முடிவு செய்து வைத்து இருக்கிறது. அஸ்வினை ஆர்டிஎம் மூலம் எடுக்க முடியாமல் போனதால் புதிய வீரர்களை எடுத்துள்ளது. முக்கியமாக அனுபவம் மிகுந்த வீரர்கள் சிலரை அணியில் எடுத்து இருக்கிறது. சென்னை அணியின் தேர்வு முறையே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. சென்னை அணியில் ஏற்கனவே டோணி, ஜடேஜா, ரெய்னா ஆகியோர் எடுக்கப்பட்டுவிட்டார்கள். மீதம் இருக்கும் 2 ஆர்டிம் வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு வீரர்கள் எடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால் இதை அஸ்வின் மீது பயன்படுத்த முடியாது என்பதால் அவர் எடுக்கப்படவில்லை. இம்ரான் தாஹிர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.1 கோடிக்கு இம்ரான் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் சிறந்த பவுலர் என்றாலும் தற்போதே இவருக்கு 38 வயதிற்கும் அதிகம் ஆகிவிட்டது.
Recommended