Popular Front of India பற்றி TamilNadu Governor RN Ravi சர்ச்சை பேச்சு
  • 2 years ago

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய ஆளுநர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருக்கின்றார். "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான அமைப்பு; மனித உரிமை அமைப்பு; மாணவர் இயக்கங்கள் போல் பல முகமூடிகளை அணிந்து கொண்டு இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாகச் செயல்படுகிறது. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் சண்டையிட ஆட்களை அனுப்புகின்றது. அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளே; பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாட்டைச் சீர்குலைப்பதையே நோக்கமாகக் கொண்டு இயங்குகின்றது" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி இருப்பது பாஜக., ஆர்எஸ்எஸ். தலைவர்கள் பேசுவது போல இருக்கின்றது.

Popular Front of India is dangerous, trying to destabilise country: TamilNadu Governor RN Ravi

#RNRavi
#PopularFrontOfIndia
#TamilNaduGovernor
Recommended