#BOOMINEWS | விருதுநகர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாள் & பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் மரியாதை |

  • 3 years ago
விருதுநகர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மகாத்மா காந்தியின் 153 வது பிறந்த நாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜரின் அவர்களின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

விருதுநகர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் வெயிலு முத்து தலைமையில் மகாத்மா காந்தி அவர்களின் 153 வது பிறந்தநாளை முன்னிட்டு ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்பு காமராஜர் இல்லம் சென்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 46-வது நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் பாலகிருஷ்ண சாமி நிர்வாகிகள் சிவகுருநாதன் , சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயபால், நாகேந்திரன், ரமேஷ்குமார் ஐஎன்டியூசி சுந்தரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Recommended