#BOOMINEWS | வரும் 26 ம் தேதி பட்ஜெட் ஆளுநர் உரையுடன் துவக்கம் சபாநாயகர் அதிரடி பேட்டி |
  • 3 years ago
வரும் 26 ம் தேதி புதுவை மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது என புதுவை மாநில சபாநாயகர் செல்வம் தெரிவித்துள்ளார்..

இது பற்றி சபாநாயகர் செல்வம் புதுவை மாநில சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில், புதுவையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு, முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 26ம் தேதி, துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 26ம் தேதி மாலை துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இந்த முறை சட்டப்பேரவையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். வரும் செப்டம்பர் 9ம் தேதி புதிய சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. வரும் 23ம் தேதி டெல்லி சென்று, பிரதமர், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்களை முதல்வர் ரங்கசாமி சந்திக்க உள்ளார். இவ்வாறு புதுவை மாநில சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
Recommended