1008 லிங்கங்கள், 75,000 ருத்ராட்சங்களில் பிரதோஷ தாண்டவர் - நகரி அருகில் அதிசய தரிசனம்

  • 3 years ago
Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx
1008 லிங்கங்கள், 75,000 ருத்ராட்சங்களில் பிரதோஷ தாண்டவர் - நகரி அருகில் அதிசய தரிசனம்


ஆந்திரமாநிலம் நகரிக்கு அருகே உள்ளது கீளாப்பட்டு என்னும் கிராமம். இங்கு 1,500 ஆண்டுகள் பழைமையான சிவாலயம் ஒன்று உள்ளது. இங்குள்ள கிராமத்து மக்கள் வித்தியாசமான முறையில் பிரமாண்டமாக மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். இந்த வைபவத்தை தரிசிக்க ஆண்டுதோறும் 1.5 லட்சம் மக்கள் வருகிறார்கள்.

ஓர் ஆண்டு விபூதி லிங்கம் என்றால் மற்றோர் ஆண்டு 3 டன் கரும்பால் ஆன சிவ வடிவம். ஓர் ஆண்டு ஒரு லட்சம் தேங்காய் கொண்டு செய்யப்பட்ட சிவ வடிவம் மற்றோர் ஆண்டு பனை ஓலைகளால் மாபெரும் லிங்கம். இப்படி ஆண்டுதோறும் மாறுபட்ட விதத்தில் சிவ வடிவத்தைச் செய்து வழிபாடு செய்யும் இந்த ஊரில் இந்த ஆண்டு என்ன விசேஷம்?

வாருங்கள் வீடியோவில் பார்க்கலாம்.

எழுத்து மற்றும் குரல் : சைலபதி

எப்படிச் செல்வது?: திருத்தணியிலிருந்து பேருந்தில் 10 நிமிட பயணத்தில் கீளாப்பட்டு கிராமத்தை அடையலாம். சிவராத்திரி காலங்களில் 24 மணி நேரமும் பேருந்து வசதி உண்டு.
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.

கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
https://tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : https://rb.gy/bh2cob

Recommended