சசிகலா- தினகரனுக்கு கிரீன் சிக்னலா?
  • 3 years ago
கட்சியின் அவைத் தலைவரான மதுசூதனன், மூத்த அமைச்சரான ஜெயகுமார் ஆகியோருக்கு இடையிலான உட்கட்சி விவகாரம், கட்சியில் பிளவை உண்டாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அதிமுக தலைமைக் கழகத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. முன்னதாகத் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று மதுசூதனன் சந்தித்து தன்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி இருக்கிறார். அதேபோல், ஓ.பி.எஸ்., ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மற்ற நிர்வாகிகளையும் மதுசூதனன் சந்தித்து, தன்னுடைய மனக் குமுறலைக் கொட்டி விட்டார். நேற்றைய குமுறலின் தொடர்ச்சியாக 'இன்று பிற்பகல் செய்தியாளர்களை மதுசூதனன் சந்திக்கிறார்' என்று தகவல் வெளியானது. கட்சி நிர்வாகிகளிடம் மதுசூதனன் என்னதான் சொன்னார் என்று பலதரப்பிலும் கேட்டோம்.




fight for throne begins in admk
Recommended