பெங்களூரு சிறையில் செம டோஸ் விட்ட சசிகலா- வீடியோ

  • 6 years ago
பரப்பன அக்ரஹாரா சிறைவாசலில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசும் வழக்கமுள்ள தினகரன், சசிகலாவுடனான சந்திப்புக்குப் பிறகு மீடியாக்களை சந்திக்காமல் கிளம்பிவிட்டார். ' வழக்கத்துக்கு மாறான கோபத்தில் இருக்கிறார் சசிகலா. ' எடப்பாடியோடு திவாகரன் போனால், போகட்டும். உன்னுடைய செயல்பாடுகளை மாற்றிக் கொள்' என தினகரனுக்கு அவர் அறிவுறுத்தியிருக்கிறார்' என்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள். மன்னார்குடி குடும்பங்களுக்குள், யார் பெரியவர் என்ற கோஷ்டி மோதல் வலுத்துள்ளது. தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிய திவாகரன், மன்னார்குடியில் அம்மா அணி அலுவலகத்தைத் திறந்தார். அ.ம.மு.கவின் அடுத்தகட்ட பயணம் பற்றித்தான் விரிவாகப் பேசினார் சசிகலா. சில இடங்களில் அவர் தினகரனைக் கண்டித்திருக்கிறார். இந்தக் கோபத்தில்தான் மீடியாக்களை சந்திக்காமல் வெளியேறினார் டி.டி.வி" என்றார் விரிவாக.

Sources said that Sasikla has warned Dinakaran on the Divakaran issue.

Recommended