இப்படியும் ஒரு கலெக்டரா ?! - நெகிழவைத்த ஒரு சம்பவம்
  • 3 years ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில், திங்கள்கிழமை மக்கள் குறைதீர்ப்பு நாள். அன்றைய தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும். மக்கள், மாவட்ட ஆட்சியரை நேரடியாகச் சந்தித்து மனு அளிப்பார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டம் சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராக்கம்மாள் என்ற 80 வயது மூதாட்டி, முதியோர் உதவித்தொகை வழங்க மனு அளித்திருந்தார். ராக்கம்மாளுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. கிராமத்தில் தனியாக, ஒரு குடிசையில் வசித்துவருகிறார். ராக்கம்மாளின் மனுவைப் பரிசீலித்த கலெக்டர் அன்பழகன், அந்த மூதாட்டிக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார்.









karur district collector feed older woman
Recommended