மன வலிமை அருளும் கீழப்பாவூர் நரசிம்மர்... இல்லம் தேடி வரும் இறை தரிசனம்!
  • 4 years ago
மகா விஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது, நரசிம்ம அவதாரம். மற்ற அவதாரங்கள் அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காக்க எடுக்கப்பட்டவை. ஆனால், நரசிம்ம அவதாரம் மட்டுமே பக்தனுக்காக எடுக்கப்பட்டது.
நரசிம்மரின் அவதாரக் காலம் வெறும் இரண்டு நாழிகை மட்டுமே. இதனால், காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் ஆகியோர் நரசிம்மரின் திருக்கோலத்தைத் தரிசிக்க விரும்பினர். அவர்கள் மகா விஷ்ணுவை பிரார்த்தித்தனர். அவர்களுக்காக மகாவிஷ்ணு நரசிம்மராக எழுந்தருளிய தலம், கீழப்பாவூர்.
வீடியோ (லக்ஷ்மி நரசிம்ம பீடம்)

- சி.வெற்றிவேல்.
Recommended