ஹாஸ்டலைக் காலி செய்யச் சொன்னால் குண்டர்களை வைத்து மிரட்டுகிறார்கள்!

  • 5 years ago
கடந்த மாதம் தினமணி.காமின் நோ காம்ப்ரமைஸ் நேர்காணலுக்காக மகாத்மாவின் தனிச்செயலராக 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெரியவர் வி கல்யாணம் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்தோம். அவருடனான உரையாடலின் போது அவர் தற்போதைய தனது பிரச்னைகளில் ஒன்றைப் பற்றிக் கூறி இதையெல்லாம் உங்களது பத்திரிகையில் நீங்கள் வெளியிடுவீர்களா? என்று கேட்டிருந்தார். தவறு என்று தெரிந்தால் அதை நிச்சயமாக பொதுவெளியில் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கு உண்டு தானே?
அதனடிப்படையில் இந்தச் செய்தி தினமணி.காமில் வெளியிடப்படுகிறது.

விருந்தினர்: வி.கல்யாணம், மகாத்மாவின் முன்னாள் தனிச்செயலர். | V. Kalyanam, PA to MAHATHMA GANDHIJI.
சந்திப்பு: கார்த்திகா வாசுதேவன், பத்திரிகையாளர் | Journalist Karthiga Vasudevan

ஓளிப்பதிவு: சுனிஷ்

படத்தொகுப்பு: சவுந்தர்யா முரளி

Recommended