மத்திய அரசுக்கு தமிழகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை.. துரைமுருகன் ஆவேசம்- வீடியோ

  • 5 years ago
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் தற்போது வீசிய புயல் தஞ்சைமாவட்டம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பலமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது பயிர் சேதம் கால்நடைகள் சேதம் வீடுகள் சேதம் மரங்கள் சேதம் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்பு அவர்கள் மீண்டும் அதனைபுணரமைக்க எவ்வளவு நிதி தேவைப்படும் அவர்களுக்கு உணவு தங்குமிடம் போன்றவற்றையெல்லாம் அமைத்து தர எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை கனக்கீடு செய்வது சாதாரண வேலையில்லை ஆனால் தமிழக முதல்வர் திருச்சி போனார் திருவாரூர் போனார் திரும்பி வந்துவிட்டார் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள் ஒட்டுமொத்த கணக்கீடு செய்யப்பட்டது குறித்து தலைமை செயலாளரோ வருவாய்த்துறை செயலாளரோ சேதம் மதிப்புகுறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை தலைமை செயலாளர் நிதி செயலாளர்கள் புயல் பாதித்த களப்பணியிலேயே காணவில்லை இவைகளை எல்லாம் கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பானியாக தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறார் மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை தற்போது வீசிய புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த பகுதி மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளுக்கு மேலாகும் மத்தியிலுள்ள பிரதமர் புயல் வீசிய போது மாலத்தீவிற்கு சென்றார் கேரளாவுக்கு சென்றார் ஆனால் தமிழகத்திற்கு பிரதமரோ மத்திய உள்துறை அமைச்சரோ நிதி அமைச்சரோ எட்டி கூடபார்க்கவில்லை மத்திய அரசுக்கு தமிழகம் என்று ஒன்று இருப்பது தெரியவில்லை என்றார்

Des: The central government does not know that there is a Tamil Nadu .. Thurumurugan voices

Recommended