தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

  • 6 years ago
மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி, 1992ம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 14 சுங்கச்சாவடிகளில் 10% வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாத்தக்கரை, வீரசோழபுரம் சுங்கச்சாவடிகள் மற்றும் திண்டிவனம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்கிறது. இதேபோல், நல்லூர் - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தடா சங்கச்சாவடி, திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலபட்டி சுங்கச்சாவடியிலும் 10 சதவீதம் கட்டணம் உயர்ரத்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Recommended