தமிழக அரசு விவசாயிகளை பழிவாங்கி விட்டது..பழனிமாணிக்கம் குமுறல்- வீடியோ

  • 6 years ago
தமிழக அரசு திட்டமிட்டு டெல்டா விவசாயிகளை பழிவாங்கி விட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கும் குற்றம் சாட்டடினார்.

தஞ்சையில் முன்னால் அமைச்சர் எஸ்எஸ் பழனிமாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்டளைக் கால்வாய் வாய்க்காலில் 800 கனஅடி தண்ணீர் உடனடியாக திறக்க வேண்டும் தண்ணீர் திறக்காததால் கடந்த 25 நாட்களாக கொள்ளிடத்தில் வீணாக தண்ணீர் செல்கிறது என்றார். தமிழக முதல்வர் தஞ்சை மாவட்டங்களை பார்வையிட்டிருக்க வேண்டும் என்றதுடன் கல்லணைக்கால்வாய் நவீனப்படுத்தும் பணி 50 சதம் முடிந்த நிலையில் சக்திவாய்ந்த பொறுப்பில் இருக்கும் வைத்திலிங்கம் மாவட்ட மக்களுக்கு மீதப்பணிகளை செய்திருக்க வேண்டும் என்றார். மணல் எடுக்க குறியாக இருந்த அரசு தூர்வார அக்கறைக் காட்டவில்லை என்று பழனிமாணிக்கம் குற்றம்சாட்டினார்.

Des: Former Union Minister SS Palanimannam alleges that the Tamil Nadu government is planning to retaliate delta farmers

Recommended