சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் கருப்பு பணத்தின் அளவு கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவு அதிகரிப்பு

  • 6 years ago
இந்திய அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் சுவிச்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்துள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் புயலாக வீசிய நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை பிடித்தார். பிரதமரானதும் கருப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில், சுவிச்சர்லாந்தில் உள்ள நேஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. இது கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 7 ஆயிரம் கோடிகளுக்கும் மேல் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ளதாகவும் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2016-ல் அதற்கு முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியர்களின் டெபாசிட் 45 சதவிகிதம் சரிவு கண்டது. ஆனால், இந்த ஆண்டு நேர்மாறாக டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கருப்புப்பணத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு கூறி வரும் நிலையில், சுவிஸ் வங்கியின் இந்த தரவுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV

Recommended