கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு
  • 6 years ago
கர்நாடகாவில் கபினி அணை நீர்பிடிப்பு பகுகளில் கடந்த வாரம் பெய்த மழையால் அந்த அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து 81 அடியை தாண்டியதால் அணையின் பாதுகாப்பு கருதி 25 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 24-ந் தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால் 18 ஆயிரத்து 428 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50 அடியை தாண்டியது. இதற்கிடையே கர்நாடகாவில் மழை குறைந்ததால் கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதையடுத்து கபினி அணையின் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. இந்நிலையில், கபினி அனைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதையடடுத்து கபினியில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended