கபினியில் இருந்து காவிரி உபரி நீர் திறப்பு - மேட்டூர் அணைக்கு வரத்து அதிகரிப்பு
  • 6 years ago
கபினியில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பால், மேட்டூர் அணைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணை நீர் மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக, அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 428 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி மட்டுமே நீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, கபினி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவையும் வினாடிக்கு 6 ஆயிரத்து 667 கன அடியாக கர்நாடகா குறைத்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறையும் என எதிர்பார்க்கிறது

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV
Recommended