உயர் அழுத்த மின் கம்பிகள்...உயிர் போகும் பரிதாபம்...வீடியோ

  • 6 years ago
மாடியில் தாழ்வாக சென்ற மின் கம்பியை தொட்ட குழந்தையை காப்பாற்ற சென்ற இரண்டு பெண்கள் மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .மின் கம்பியை தொட்ட குழந்தை பரிதாமாக உயிரிழந்தது
சென்னையை அடுத்த சேலையூர் பாரதி நகரை சேர்ந்தவர் சங்கர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி ராணி இவர்களது மூன்றாவது குழந்தை கிஷோர் வீட்டின் மாடியில்விளையாடி கொண்டிருந்தான் அப்போது வீட்டு மாடியில் தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் குழந்தையின் கை பட்டதில் குழந்தை அலறியுள்ளது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு மாடிக்கு ஓடிவந்து குழந்தையை காப்பாற்ற முயன்ற சங்கரின் உறவுக்கார பெண்களான சௌமியா மற்றும் ரேணுகா என்ற பள்ளி மாணவிகளும் படு காயம் அடைந்தனர் இதில் குழந்தை கிஷோர் சிகிச்சைக்கு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான் மாணவி சவுமியா உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலும் ரேணுகா குரோம்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வீட்டு மாடியின் மேல் தாழ்வாக மின்சார கம்பிகள் செல்வதால் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Recommended