குரங்கணி காட்டுத்தீயில் இருந்து 27 பேர் மீட்பு

  • 6 years ago
தேனி குரங்கணிமலை காட்டுத் தீயில் சிக்கியவர்களில் 27 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தேனி அருகே குரங்கணிமலை பகுதியில் சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூரை சேர்ந்த மாணவிகள், பெண்கள் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியது.

இதில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து தமிழக அரசு மத்திய அரசின் உதவியை நாடியது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவின் பேரில் விமானப்படையும் உதவிக்கு களத்தில் இறங்கியது. கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு விரைந்தன. இந்நிலையில் குரங்கணிமலை தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Sources said that 27 trekkers rescue from Theni District Wild fire.

Recommended