போலீசாரிடம் அழகேசன் கேட்ட முதல் கேள்வி- வீடியோ

  • 6 years ago
சென்னை கேகே நகரில் கல்லூரி வாசலில் வைத்து மாணவி அஸ்வினியை துடிதுடிக்க கொன்ற கொலையாளி அழகேசன் போலீசாரிடம் கேட்ட முதல் கேள்வி அஸ்வினி எப்படி இருக்கிறாள் என்பது தானாம். அஸ்வினி இறந்துவிட்டதாக போலீசார் கூறியதை கேட்டு அழகேசன் தேம்பி தேம்பி அழுததோடு தான் உயிர் வாழ விரும்பவில்லை என்றும் கூறியுள்ளாராம்.

சென்னை கேகே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தவர் அஸ்வினி. இவர் நேற்று பிற்பகல் கல்லூரி முடிந்து வெளியே வந்த போது அழகேசன் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அஸ்வினியை கழுத்தை அறுத்து கொன்றார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அஸ்வினி அதே இடத்தில் உயிரிழந்தார்.

Recommended