சென்னையில் இளைஞர் மர்ம மரணம்!- வீடியோ

  • 6 years ago
சென்னை முகப்பேர் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : முகப்பேர் பகுதியில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை அம்பத்தூர் அடுத்த முகப்பேர் வேணுகோபால் தெருவை சேர்ந்தவர் 24 வயது கண்ணன். இவர் வீட்டின் அருகில் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்டு சிறிய காயத்துடன் மயங்கி கிடந்தார் அதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து நொலம்பூர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் நொலம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended