சண்டிகரில் மர்ம மரணம் அடைந்த தமிழக மாணவரின் உடல் ஒப்படைப்பு- வீடியோ

  • 6 years ago
சண்டீகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமானம் மூலம் இன்று ராமேஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். இவர் சண்டீகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

Recommended