போலீசுக்கே டிமிக்கி கொடுத்து...தம்பதியின் உடலை எடுத்து சென்ற உறவினர்கள்- Oneindia Tamil
  • 6 years ago
டிராவல்ஸ் நிறுவன அதிபரும் அவரது மனைவியான கல்லூரி பேராசிரியையும் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். அவர்களது உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி பாரிநகரை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் டிராவஸ் நிறுவனமும் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி அங்குள்ள கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றி வருகிறார். இருவரும் நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். மகேஸ்வரியின் தாயார் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்த போது இருவரும் இறந்து கிடந்துள்ளனர். இது குறித்து அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க உறவினர்கள் ஒன்று சேர்ந்து இறந்தவர்களின் உடல்களை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி சொந்த ஊருக்கு எடுத்து சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாருக்கே தெரியாமல் உறவினர்கள் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended