முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி- வீடியோ

  • 6 years ago
பள்ளி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுவை முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் காயம் அடைந்தவர்களுக்கு 1லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் பழைய கட்டிடங்களில் இயங்கி வரும் பள்ளி கூட்ட கட்டிடங்களை இடிக்கப்பட்டு புது கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Des : The Chief Minister said that the government will work for the families of the two who died in the collapse of the school building.

Recommended