போயஸ் வீட்டில் தான் பிறந்து வளர்ந்தேன் தீபா பேட்டி

  • 6 years ago
இடைத்தேர்தலில் போட்டியிடுவது மட்டுமே தனது லட்சியம் கிடையாது என்றும் அண்ணா திமுகவினர் அழைத்ததால் தான் அரசியலில் ஈடுபட்டதாகவும் போயஸ் இல்லத்தில் பிறந்தத வளர்ந்ததாக தீபா கூறியுள்ளார்.

தருமபுரியில் தீபா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் போட்டியிடுவேன் என்பது என் லட்சியம் இல்லை என்றும் அதிமுகவிற்கு ஒரு வாரிசு வேண்டும் என்றும் அதேபோல் அதிமுகவை முறையாக நடத்தி செல்வதற்கு தகுதியான ஆள் வேண்டும் என்று கட்சியினர் கூறியதால் தான் அரசியலில் நுழைந்ததாக கூறினார். ஆர். கே. நகர் இடைத்தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மகள் ஏதும் இல்லை என்றும் சிலர் வேண்டும் என்றே பொய்யான தகவல்களை பரப்புவதாக தீபா கூறினார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் தான் பிறந்து வளர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Dec : Deepa said that she was born in the Poissy residence that she was politically involved because she had been invited to Anna by the DMK.

Recommended