"எத்தனையோ முறை கடைசி ஓவர் வீசியுள்ளேன், நெஹ்ரா கண்ணீர் மல்க பேட்டி- வீடியோ

  • 6 years ago
இந்தியாவின் முக்கிய வேகப்பந்து பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்று டெல்லியில் நடந்த டி-20 போட்டியில் அவர் கடைசியாக விளையாடினார். மேலும் அந்த போட்டியின் கடைசி ஓவரை நெஹ்ராவே வீசினார். இந்த போட்டி அவரது சொந்த மண்ணான டெல்லியில் நடைபெற்றது. அவரது குடும்பத்தில் இருந்து அனைவரும் போட்டியை காண்பதற்காக வந்து இருந்தனர். போட்டி முடிந்த பின் நெஹ்ரா வருத்தத்துடன் பேட்டியளித்தார். இந்திய வீரர்கள் அனைவருமே அவருக்கு மரியாதை அளித்தனர்.

நேற்று நடந்த இந்த இந்தியா நியூசிலாந்து இடையிலான டி-20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துவுடன் நேற்று டெல்லியில் நடந்த டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். =

Indian bowler Nehra has announced his retirement from International Cricket. He has retired from all form of ICC cricket. He has talked about his cricket life in post match interview

Recommended