சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை.. நிரம்பி வழிகிறது பக்கிங்காம் கால்வாய்!- வீடியோ

  • 7 years ago
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. தாமதமாக தொடங்கினாலும் தனது வேலையை சரியாக செய்து வருகிறது வடகிழக்குப் பருவமழை. கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவம் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கனமழை காரணமாக சென்னையின் முக்கிய சாலைகள் குளங்களாக மாறியுள்ளன. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரில் சிக்கி வாகனங்கள், பழுதாகி நிற்பதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் தாழ்வான இடங்களில் உள்ள விடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

Many parts of Chennai got heavy rain thought the night and the buckingham canal is overflowing. In Chennai low lying areas surrounded by flood.

Recommended