வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

  • 6 years ago
வடகிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரேநாள் வெளுத்துக் கொட்டிய மழையால் எங்கெங்கும் வெள்ளக்காடாக காட்சி தருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.சென்னையில் மீட்பு மற்றும் உதவி பணிகளுக்கு 1913 என்ற டோல் ப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
செம்பாரக்கதத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16.6 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்இருப்பு ஒரே நாளில் 150 மில்லியன் கனஅடி அதிகரித்துள்ளது. நேற்று 308 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு இன்று 452 மி.கனஅடியானது.
இதேபோல் புழல் ஏரியிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று 150 மில்லியன் கனஅடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 487 மில்லியன் கனஅடியாக அதிகரித்தள்ளது.

The water level of lakes offering drinking water to Chennai has increased by the heavy rains in Chennai and suburbs.

Recommended