திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாய்ச்சண்டை; கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு!
  • 2 years ago
மாநகராட்சி கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் உள்ள தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சாக்கடை பிரச்சினைகளுக்கு அதிமுக அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இதுவரை வார்டுகளுக்கு வந்து பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு குறுக்கிட்ட நாற்பத்தி ஏழாவது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் பேசும்போது அமைதியாக இருக்கும்படி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டரங்கில் லேசான பரபரப்பு ஏற்பட்டது. நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கேள்வி எழுப்பியதற்கு திமுகவின் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து திமுகவினர் அதிமுகவை குற்றஞ்சாட்டினர்.
Recommended