போர் வேண்டாம்; ஒழிக்கும் பள்ளி மாணவர்களின் குரல்!

  • 2 years ago
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, பென்சில் மற்றும் இனிப்புகளை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் வழங்கினார். முன்னதாக மாணவர்களிடம் கலந்துரையாடிய போது அவர்களின் அறிவுத் திறனை அறிந்து கொள்ளும் விதமாக தற்போதைய முக்கிய நிகழ்வு எது என கேள்வி எழுப்பினார். அதற்கு மாணவர்கள் உக்ரைன் போர் என பதிலளித்தனர். உற்சாகமடைந்த எம்எல்ஏ தொடர்ந்து போர் அவசியமா என மறு கேள்வி எழுப்ப, மாணவர்கள் போர் வேண்டாம், வேண்டவே வேண்டாம் என ஓங்கி ஒலித்தனர்.

Recommended