#cithiraitv #அகண்டா திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் பாலகிருஷ்ணா |

  • 2 years ago
#cithiraitv #திருப்பதி:தெலுங்கில் வெளியான அகண்டா திரைப்பட வெற்றியை தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்டார் நடிகர் பாலகிருஷ்ணா.

நடிகர் பாலகிருஷ்ணா இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை விஐபி தரிசனத்தில் வழிபட்டார். அவர் கதாநாயகனாக நடித்த அகண்டா திரைப்படம் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி கொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர் திருமலையில் இரவு தங்கி இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் வேத ஆசி, பிரசாதங்கள் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணா கடந்த 2ஆம் தேதி தெலுங்கில் வெளியான அகண்டா திரைப்படம் வெற்றி பெற்றதை முன்னிட்டு இயக்குனர் போயபாட்டி சீனுவுடன் ஏழுமலையானை தரிசனம் செய்தேன் என்று கூறினார். மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் மகனான பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.

Recommended