#chithiraitv #"TAMILNADU NO.1- முன்பை விட கூடுதலாக நான் உழைத்தாக வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • 2 years ago
செயலாற்றலில் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்து அறிவித்துள்ள `இந்தியா டுடே’வின் ஆய்வு முடிவினை ஏற்று நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

புகழ்பெற்ற ஆங்கில இதழான `இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில்- செயலாற்றலில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிவினை ஏற்று நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

`இந்தியா டுடே’ ஆங்கில இதழ் நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள பெரிய மாநிலங்களில் செயலாற்றலில் பொருளாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, விவசாயம், சுகாதாரம், கல்வி, சட்டம் - ஒழுங்கு, ஆட்சி நிர்வாகம், ஒட்டுமொத்த வளர்ச்சி, சுற்றுலா, சுற்றுச்சூழல், தூய்மை, தொழில் முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்ட துறைகளில் எந்தெந்த மாநிலங்கள் சிறப்பாகக் கையாள்கின்றன என்ற பட்டியலை வெளியிட்டு, இவற்றில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாகத் திகழ்வதாக அதன் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரைவருமாறு: இதோ, உங்கள் பார்வைக்கு

Recommended