#chithiraitv #100 நாள் வேலை வாய்ப்புதிட்டத்தில் 4 மாதம் சம்பளம் பாக்கி MP மாணிக்கம் தாகூர் அதிரடி பேட்டி |

  • 2 years ago
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மற்றும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஷ்க்கனி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர்., கருப்புப் பணத்தை ஒழிப்போம் என்று கூறும் மோடி அரசு தீபாவளி வரை நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 4 மாத சம்பளம் பாக்கியை கொடுக்காதது மிகவும் வெட்கக் கேடான விஷயம். இதுதொடர்பாக தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். உடனடியாக 4 மாத சம்பள பாக்கியை நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். நாடாளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதி என்பது 1993ல் நரசிம்மராவால் தொடங்கப்பட்ட நிதி. இதை நிறுத்திய மோடி அரசு நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகத்தில் கிடைத்த அடியின் விழைவாக எம்.பி. நிதியை மீண்டும் ழங்கியுள்ளார்கள். ஒரு தோல்விக்குப் பின்புதான் புத்தி வரும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இதை வரவேற்கிறோம். ஆனால் இது போதாது. இது 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டது. இதை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். காங்கிரஸ் நடை பயண இயக்கத்தில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு குறித்து மக்களிடம் வலியுறுத்த உள்ளோம். மாநிலங்கள் நிதியை கை வைப்பதில் மத்திய அரசு முழு கவனத்துடன் உள்ளது. 2014ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போல் வரி குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும். அதிமுக ஆட்சி ஊழல் ஆட்சியாக இருந்ததால்தான் மீண்டும் சென்னையில் வெள்ளம் பாதித்துள்ளது என்றார்.

Recommended