செங்கிஸ்கானின் பொக்கிஷம்!
  • 3 years ago
‘செங்கிஸ் கான்’... 800 ஆண்டுகளுக்கு முன்பு உலகம் முழுக்க அச்சத்தை விதைத்த பெயர். ஆசியாவில் தொடங்கி ஐரோப்பா கண்டம் வரை படையெடுத்துச் சென்று, பல தேசங்களைச் சூறையாடியவர். ஆசியாவின் மையத்தில் இருக்கும் மங்கோலியாவில் ஒரு நாடோடி இனக்குழுத் தலைவனின் மகனாகப் பிறந்து, மற்ற இனங்களையும் இணைத்து ஒரு வலிமையான படையை உருவாக்கி, வெற்றிகளையும் தோல்விகளையும் சமமாகச் சந்தித்து வளர்ந்தவர், ஒரு கட்டத்தில் நிகரற்ற பேரரசனாக உருவெடுத்தார். பிரமாண்ட மாட்டு வண்டியில் - நகரும் கூடாரத்தில் - அமர்ந்து செங்கிஸ் கான் நடுநாயகமாக வர... வெடிமருந்துகளை வீசி எதிரிக் கோட்டைகளை நிலைகுலையச் செய்து வீழ்த்தும் குதிரைப்படையினர் அவரைச் சூழ்ந்திருப்பார்கள். ‘செங்கிஸ் கான் படையெடுத்து வருகிறார்’ என்ற ஒற்றை வரித் தகவலே பல நாடுகளை வீழ்த்தியது; பல மன்னர்களை மணிமுடி துறக்கச் செய்தது; பல படைகளை ஓடச் செய்தது. அவர் உருவாக்கிய மங்கோலியப் பேரரசு அளவுக்கு, இந்தப் பூமியின் பெருநிலப் பரப்பை வேறு எந்த இனமும் ஆண்டது இல்லை.
Recommended