தமிழகத்தில் பெருந்தொற்று தற்போதைய நிலவரம் | tn
  • 3 years ago
தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் 463 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 629ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 837ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 33 ஆயிரத்து 89 பேர் குணமடைந்துள்ள நிலையில், 4 ஆயிரத்து 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு நேற்று 6 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 478 ஆக அதிகரித்துள்ளது.
Recommended