பழைய சோறு இப்போ 5 STAR HOTEL மெனுவில் இருக்கு! பழைய சோற்றில் என்ன இருக்கிறது?

  • 3 years ago
#sudasuda #tamilnews #latesttamilnews #health #food

Reporter - ஜெனிஃபர்.ம.ஆ
Camera - எம்.விஜயகுமார்
சோறு மிஞ்சிவிட்டால் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் உண்டால் அது பழையசோறு.பழையசோறு என்பது ஒருகாலத்தில் வறுமையின் அடையாளமாக இருந்தது. பள்ளி, கல்லூரிக்கோ, அலுவலகத்துக்கோ யாரும் பழைய சோறு கொண்டுவந்ததில்லை. வறிய குடும்பங்களில் ‘ஐஸ் பிரியாணி’ என்று அதை ஜாலியாக அழைப்பதும் உண்டு. இப்போதுள்ள தலைமுறை பழைய சோற்றையே பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்னொருபக்கம் ஃபைவ் ஸ்டார் மெனுவில் பழைய சோறு சேர்ந்திருக்கிறது.
எதற்கு இந்தப் ‘பழங்கதை’ என்கிறீர்களா? ‘பழையது’ என்று நாம் சொல்கிற பழைய சோறு, குடல் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகவே இருக்கிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள் நம் மருத்துவர்கள்.

சோறு மிஞ்சிவிட்டால் இரவு தண்ணீர் ஊற்றி வைத்து, மறுநாள் உண்டால் அது பழையசோறு. நார்த்தங்காய் ஊறுகாய், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் காம்பினேஷனில் கொஞ்சமாக மோர் ஊற்றிக் கரைக்கப்பட்ட பழையதை சாப்பிட்டால், நாக்கு ‘வேணும்’ ‘வேணும்’ என்று கேட்கும். அது கொடுத்த எனர்ஜியில்தான் கொடும் வெயிலையும் தாங்கி நம் மூதாதைகள் காடு மேடுகளில் உழைத்தார்கள். முக்கியமாக காலையில் எழுந்து நீராகாரம் குடித்தால் மலச்சிக்கலுக்கு வாய்ப்பேயில்லை.


Soaked rice is now new medicine! Soaked rice was once a symbol of poverty. No one brought old rice to school, college or office. Poor families also jokingly call it ‘ice biryani’. The present generation may not have seen the old saying. But, on the other hand, Soaked rice has been added to the Five Star menu.

Recommended