"தூய தேசத்தை உருவாக்குதே எங்களின் வாக்குறுதி" - சீமான்
  • 3 years ago
சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும் என்றும், அதிமுக - திமுக தனித்துப் போட்டியிடுமா எனவும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு ஓரே வாய்ப்பு நாம் தமிழர் கட்சி என்பதால் தான், மக்களை நம்பி தனித்துப் போட்டியிடுகிறோம் என தெரிவித்தார். அடிப்படை வசதிகளான கல்வி, மருத்துவம், குடிநீர் அனைத்தும் சந்தை மயமாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார். மக்களின் அறியாமை, வறுமை, மறதியை முதலீடாக வைத்து அரசியல் செய்யப்படுவதாக சீமான் வேதனை தெரிவித்தார்.
Recommended