பாலியல் வன்கொடுமை மட்டும் செய்யவில்லை...! நடந்தது என்ன?
  • 3 years ago
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலம், ஹாத்ராஸ் (Hathras) மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், நான்கு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. அந்த இளம்பெண்ணுக்கு நீதி கிடைத்தே தீர வேண்டும் என்று நெட்டிசன்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இளம்பெண் `வால்மீகி' என்ற பிற்படுத்தப்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். `மாற்று வகுப்பைச் சேர்ந்தவர்களால் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது' என்று சொல்லி சில பட்டியலின அமைப்புகளும் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் களமிறங்கியிருக்கிறார்கள்.

Credits:
Reporter - Varu
Recommended