பணம் எடுக்கப்பட்டதாகத் தொடர்ந்து 8 மெசேஜ்கள்! ஏமாந்த மத்திய அரசு ஊழியர்!

  • 4 years ago
சென்னை ஆவடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரிடம், வங்கி மேனேஜர் என்று கூறி 4.8 லட்சம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்த ஆவடி, வீராபுரம், ஏ.கே.ஏ.நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ் (64). இவர் ஆவடியில் செயல்படும் கனரக வாகன தொழிற்சாலையில் (ஹெச்.வி.எஃப்) வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர், அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் அக்கவுன்ட் வைத்துள்ளார். அதில் தனக்கு ஓய்வூதிய பணத்தை சேமித்து வைத்திருந்தார். கடந்த 4-ம் தேதி மதியம் 2 மணியளவில் புஷ்பராஜின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

#CoronaVirus #cybercrime #Crime

Recommended