கதறக் கதற சித்ரவதை! ஒரு யானையின் கண்ணீர் கதை!
- 3 years ago
சர்க்கஸ்... விலங்குகளை வைத்துப் பல விசித்திரங்களை சர்க்கஸ்கள் நிகழ்த்திக்கொண்டே இருக்கும். பார்க்கும் பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்வார்கள். விலங்குகள் சர்க்கஸ் அரங்கத்துக்கு வந்த கதைகள் எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியாதவை. அதில் டைக் என்கிற யானைக்கு நடந்தது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. கரடு முரடான மனித இனத்திடமிருந்து தப்பிக்க போராடிய ஒரு யானை குறித்த கதைதான் `டைக்”.