திருமுருகன் காந்திக்கு ஏன் இந்த சட்டம் தெரியுமா? | Thirumurugan Gandhi
  • 3 years ago
`சிறுநீர் கழிக்கணும்னு மூணு மணி நேரமா கேட்டுட்டு இருக்கேன் நிறுத்தவே இல்ல' என ஆதங்கப்பட்டு திருமுருகன் காந்தி பேசிய காணொலிக் காட்சி நம் முன் பல கேள்விகளை வைத்திருக்கின்றன. அவர் கைது செய்யப்படுவது ஒரு வாடிக்கையான செய்திதான் என்றாலும், இம்முறை அவர் கைது செய்யப்பட்டிருப்பது, சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ். வழக்கறிஞர்களின் பேச்சு மொழியில் இதை `யுஏபிஏ' என்கிறார்கள். (UAPA- Unlawful activities prevention act) இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படும் அளவுக்கு திருமுருகன் காந்தி என்ன செய்தார். இந்தச் சட்டத்தில் இதற்குமுன் கைது செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக சில வழக்கறிஞர்களுடன் பேசினேன். அவர்கள் சொன்ன பதில்கள் பெரும் அதிர்ச்சியையும், நம் கருத்துச் சுதந்திரத்தின் மீது அவநம்பிக்கையையும் கொடுப்பதாக இருந்தன. அவர்களிடம் பேசியதிலிருந்து.
Recommended