யானை அதிக அன்புள்ள ஒரு முட்டாள்! | A Day With Elephant

  • 4 years ago
யானை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும் ! சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருக்குமே யானை என்றால் கொள்ளைப் பிரியம். யானையை பார்த்தாலே நம்மை அறியாமல் சிரித்து,மகிழ்கிறோம்.மதித்து, கொஞ்சுகிறோம். பலர் ஆசீர்வாதம் பெறுகிறோம். இப்படி எல்லாமுமான யானைக்கு, என்ன சந்தோஷம் கொடுக்கிறோம் ? ஆண்டுக்கு ஒருமுறை, பாகனுடன் , புத்துணர்ச்சி முகாமுக்கு அனுப்புவதே , கோயில் யானைகளுக்கான கொண்டாட்டமல்லவா. யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாம்,கோவையில் உள்ள தேக்கம்பட்டி என்கின்ற கிராமத்தில் உள்ளது. இங்கே யானைகளை எப்படி பார்த்துக்கொள்கிறார்கள் ? எந்தவகையில் புத்துணர்ச்சி கொடுக்கிறார்கள் ? யானைகள் அதை எப்படி கொண்டாடுகிறது ? இப்படி அத்தனைக்குமான உணர்வுப்பூர்வமான விடை, இந்த வீடியோவில்.

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host - Avudaiappan |Camera - Jeevakaran.T, Venkataraj | Edit -Dinesh | Sound Engineer - Santhosh,Esidor Edberg

Recommended