இலங்கை தமிழர்கள் குடும்பத்தினருக்கு சென்னை பெருநகர காவல்துறை ஏற்பாட்டில் கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

  • 4 years ago
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சென்னை பெருநகர காவல் பகுதிக்குள் வாழும் 530 இலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு சக்தி ஃபவுண்டேஷன் *உதவியோடும், மாநகர காவல் துறையின் பங்களிப்போடும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பின் ஒருங்கிணைப்போடும் (UNHCR), நிவாரண பொருட்கள் *வளசரவாக்கம் கல்யாணி திருமண மண்டபத்தில் 23 மே 2020 அன்று காவல் துணை ஆணையர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது . இந்நிவாரண உதவி வழங்குவதற்கு நுங்கம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் உதவி ஆணையர்கள் சூளைமேடு மற்றும் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர்கள் முன்னின்று ஏற்பாடுகளை செய்திருந்தனர் .

Recommended