கோவை டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேக பைக்ரேஸ்

  • 5 years ago
கரூர் நகரின் மையப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீச்சரிவாளில் கேக் வெட்டிய ரெளடிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, தற்போது, கரூர் புறவழிச்சாலையான திருச்சி பைபாஸ் ரோட்டில் பைக்கில் சாகசத்தில் ஈடுபடுவது தற்போது பிரபலமாகி வருகின்றது.

இந்நிலையில், ஏற்கனவே சென்னை மற்றும் கோவையில் தான் பைக்ரேஸ் மற்றும் பைக்ரேஸினால் செல்பி ஆகியவைகளினால் பெரும் விபத்து ஏற்பட்ட நிலையில், ஆங்காங்கே அதி வேக பைக் ரேஸ்கள் காவல்துறையினரினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கரூர் புறவழிச்சாலையான திருச்சி பைபாஸ் ரோட்டில் பைக்ரேஸ் என்னும் பெயரில் தற்போது வீரர்கள் சாகசம் என்கின்ற பெயரில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் மட்டுமில்லாமல், கார் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளும் தற்போது அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Recommended