திருச்சியில் சொந்த பேருந்தையே திருடி சென்ற நபர் கைது செய்யப்பட்டார்- வீடியோ

  • 5 years ago
திருச்சியில் சாலை வரி கட்டாமல் இயங்கி வந்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு திருச்சி பிராட்டியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத நபர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் முன்பக்க கேட்டின் பூட்டை உடைத்து திருடிச் சென்றதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களின் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதனடிப்படையில் அருப்புக்கோட்டையில் வைத்து தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சுயம்பு என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது ஆம்னி பேருந்தை தானே திருடியதாக ஒப்புக்கொண்டார். அதனைத்தொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 9 லட்சம் மதிப்புள்ள ஆம்னி பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட சுயம்பு பேருந்தின் உரிமையாளர் என்பதும், அவரின் சகோதரர் ராமலிங்கமும் சேர்ந்து பேருந்தை திருடியது தெரியவந்தது.

DES : A man was arrested for stealing his own bus in Trichy.

Recommended