குடியாத்தம் பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த பாரில் 250 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது -வீடியோ
  • 5 years ago
வேலூர்மாவட்டம்,குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் பின்புறத்தில் உள்ள அரசு மதுபான கடை அருகே அனுமதியின்றி பார் செயல்பட்டு வருவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவலின் பேரில் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் சுந்தரராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் அனுமதியின்றி செயல்பட்டு வந்த பாரில் சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 போலி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது அதனை பறிமுதல் செய்து. விற்பனை செய்த பாரில் பணிபுரியும் ராமாலை காந்தி கணவாய் பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயராகவன் இருவரையும் கைது குடியாத்தம் காவல் நிலையத்தினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான பாரின் உரிமையாளர் ரமேஷ் என்பவரை தேடி வருகின்றனர் .

des : 2 arrested for seizing 250 fake liquor bars in Barracks
Recommended