ரயில் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்- வீடியோ
  • 5 years ago
வேலூர்மாவட்டம்,அரக்கோணம் முதல் காட்பாடி வரை துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் ரயில் நிலையங்களுக்கு முக்கிய தண்டவாள இணைப்பு பகுதிகளிலும் பாதுகாப்பு சேலம் பகுதியில் ஓடும் ரயில்கள் தொடர் ரயில் கொள்ளைகள் நடைபெற்று வந்ததை முன்னிட்டு ரயில்வே கொள்ளையர்களை பிடிக்கவும் இந்த பகுதியில் ரயில் கொள்ளைகள் நடைபெறாமல் தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணம் ,சித்தேரி ,அன்வர்திகான்பேட்டை ,பானாவரம் ,அம்மூர் ,முகுந்தராயபுரம்,காட்பாடி,லத்தேரி வரை ரயில்வே காவல்துறையினரும் மற்றும் தமிழக காவல்துறையும் இணைந்து ரயில் நிலையம் மற்றும் ரயில்கள் சிக்கனலுக்காக காத்திருக்கும் ரயில்வே இணைப்பு பகுதி போன்ற இடங்களில் துப்பாக்கிய ஏந்திய காவலர்கள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர் முக்கிய ரயில்களிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு ரயில்களிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது இதனை நள்ளிரவில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அரக்கோணம் ரயில்நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர் ரயில் கொள்ளையர்கள் சிக்கனல் இடங்களில் இறங்கி தப்பி செல்ல முயன்றாலும் அவர்களை சுட்டுபிடிக்கவும் காவல்துறையினர் முடிவு எடுத்து இந்த அதிரடி நடவடிக்கையை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

des : Warning action to catch train robbers in Salem and prevent train fleets from occurring
Recommended