அரசை வெளுத்து வாங்கிய அன்புமணி

  • 6 years ago
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, நிர்வாகம் இல்லாமை, நிலக்கரி ஊழல், நிலக்கரி பேரம் நடந்துள்ளதாகவும் தமிழகத்தில் நடப்பது இருண்ட ஆட்சி என்று பாமாக இளைஞர் அணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் தொடர் மின்வெட்டும் அரசின் முறையான நிர்வாகம் இல்லாமை, நிலக்கரி ஊழல், நிலக்கரி பேரம் தனியாருக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமே இவை அனைத்திற்கும் காரணம் என்றார். முன்னால் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் வருமானவரித்துறை சோதனை, அடுத்தது டிஜிபி வீட்டில் சிபிஐ ஆய்வு சுகாதாரத்துறை துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடந்தது. ஆளும் கட்சியினர் வீடுகளிலும் அதிகாரிகளின் வீடுகளும் சோதனைகள் நடக்கிறது. ஆனால் அமைச்சருக்கு கட்சியில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது கட்சியில் அவருடைய செல்வாக்கை காண்பிப்பதாக கூறினார்.

தமிழகத்தில் தொடர் மின்வெட்டு, நிர்வாகம் இல்லாமை, நிலக்கரி ஊழல், நிலக்கரி பேரம் நடந்துள்ளதாகவும் தமிழகத்தில் நடப்பது இருண்ட ஆட்சி என்று பாமாக இளைஞர் அணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended