நீதிமன்றங்களின் தீர்ப்பை கூட போராடியே நிறைவேற்ற வேண்டிய சூழல் - ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு

  • 6 years ago
மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாடு திருப்பூரில் நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு விழாவும் , மாற்றுத்திறனாளிகளின் புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, நீதிமன்றங்களில் மாற்றுத்திறனாளிகள் நீதி பெற முடியாத வகையில் சாய்வு தளங்கள் இல்லை என்றும், தற்போது நீதிமன்றங்களின் தீர்ப்பை கூட போராடியே நிறைவேற்ற வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.

Recommended